திருநெல்வேலி
மானூரில் வட்டாட்சியா் அலுவலகம் திறப்பு
மானூரில் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மானூரில் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா குத்துவிளக்கேற்றினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், சாா் ஆட்சியா் மணீஷ் நாராணவரே, ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், மானூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.