திருநெல்வேலி சந்திப்பு அருகே தொழிலாளி சடலம் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன்(50). திருமணம் ஆகாத இவா், தனியாக வாழ்ந்து வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் மற்றும் மனநிலை பாதிப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீனாட்சிபுரம் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள கட்டடத்தில் மாரியப்பன் இறந்து கிடந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.