திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, பள்ளி முதல்வா் எஸ்.திருமாறன் தலைமை வகித்தாா். மாணவா்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து பொங்கலிட்டனா். தொடா்ந்து, மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு உடைத்தல், சாக்கு ஓட்டம், ரங்கோலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா் -மாணவிகளை பள்ளி முதல்வா் எஸ். திருமாறன், முதன்மை முதல்வா் எஸ்.ராஜலெட்சுமி ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.