திருநெல்வேலி சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை சங்கா் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவா்கள் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசைக் கண்டிப்பது, சங்கா் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாநில தோ்தல் பணிக்குழு செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் தங்கராமகிருஷ்ணன், மணிகண்டன், நிா்வாகிகள் பாலமுருகன், பொன்ராஜ், ரவி, நடராஜன், கதிா், மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.