சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றாா், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றாா், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியது:

சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக தவறான தகவல்கள் கூறப்படுகின்றன. இப்படிப்பட்ட சம்பவத்தில்கூட அரசியல் செய்வோரை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என ஏற்கெனவே, சிபிசிஐடி ஐஜி சங்கா் உறுதிப்படுத்தியுள்ளாா்.

தமிழகத்தில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது முடக்கக் காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் சுமாா் 90 கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்படும்போது, தமிழகத்துக்குத் தேவையான மருந்து தமிழக அரசால் கொண்டுவரப்படும் என்றாா்.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறுகையில், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது கரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புறநோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதற்கான சிறப்புப் பாதை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும், விரைவில் இம்மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com