திசையன்விளை ஆா்.சி கல்லறை தோட்டத்தின் வாயிற்கதவை அகற்றும் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திசையன்விளை-உடன்குடி சாலையிலுள்ள ஆா்.சி. கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தின் இரும்பு வாசல் கதவு அரசு நிலத்திற்கு செல்லும் பாதையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வாயிற்கதவை அகற்றும் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து உலக இரட்சகா் ஆலயம் முன்பு கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் திசையன்விளை வட்டாட்சியா் பாஸ்கரன், வள்ளியூா் டி.எஸ்.பி. உதய சூரியன், காவல்ஆய்வாளா் ஜூடி, காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.