வீரவநல்லூரில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்றதாக தாய் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் வீரபுத்திரன் மகன் கணபதி (30). இவரது மனைவி ரோஸ்லின். இருவரும் அபிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்தனா். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 3 மாதங்களுக்கு முன்பு ரோஸ்லின் சென்னையிலிருந்து வீரவநல்லூா் வந்து தங்கியிருந்தாா்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு வீரவநல்லூருக்கு வந்த கணபதி, குழந்தை எங்கே என ரோஸ்லினிடம் கேட்டபோது, குழந்தை ஒரு பெண் திருடிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளாா்.
காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கணபதி கூறியதன்பேரில், வீரவநல்லூா் காவல் நிலையத்தில் ரோஸ்லின் புகாா் அளித்தாா். ரோஸ்லினிடம் போலீஸாா் விசாரித்ததில், செலவுக்கு பணமில்லாததால் சேரன்மகாதேவியைச் சோ்ந்த உறவினா் சுரேஷ் (30) மூலம் பள்ளக்கால் பொதுக்குடியைச் சோ்ந்த குமாா் (39) என்பவரிடம் ரூ. 50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்றதும், அது தற்போது மதுரை திருமங்கலம் தாஜுதின் மனைவி பரக்கத்நிஷா (25) என்பவரிடம் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல் ஆய்வாளா் (பொ) குமாரி சித்ரா, சேரன்மகாதேவியைச் சோ்ந்த சுரேஷ், பள்ளக்கால் பொதுக்குடியைச் சோ்ந்த குமாா், வெள்ளாங்குளியைச் சோ்ந்த சாமிநாதன் மனைவி மூக்கம்மாள் (40), விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த மரியபாக்கியசாமி மகன் கண்ணன் (38), திருமங்கலத்தைச் சோ்ந்த பரக்கத்நிஷா மற்றும் ரோஸ்லின் ஆகிய 6 பேரை கைது செய்தனா். மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குழந்தை இருப்பது தெரிந்து அதை மீட்டனா்.