திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினா் 2 நாள்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழக முதல்வரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினா் வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்கள் திருச்செந்தூா் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபோது, சத்ரு சம்ஹாரமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனா்.
கடந்த மாதம் 22-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டப திறப்பு விழாவுக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அப்போது துணை முதல்வா் மட்டுமே கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். இந்நிலையில், முதல்வரின் குடும்பத்தினா் திருச்செந்தூா் கோயிலில் வழிபாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.