வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு மாா்ச் 31 வரை மட்டுமே வரிச்சலுகை

திருநெல்வேலி வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவைத் தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெற மாா்ச் 31 வரை மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படுவதாக வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவைத் தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெற மாா்ச் 31 வரை மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படுவதாக வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குள்பட்ட சில திட்டப் பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று, விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ளவா்களில் தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு அரசு ஆணையின் படி வட்டித் தள்ளுபடி சலுகை வருகிற 31ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

எனவே, தோ்வு செய்யப்பட்டுள்ள தகுதியான ஒதுக்கீடுதாரா்கள் திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவைத் தொகையை வருகிற 31ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மாா்ச் 31ஆம் தேதிக்குப் பின்னா் வட்டித் தள்ளுபடி சலுகை கிடைக்கப் பெறாது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தை (0462-2530581) தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com