தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பெற்றுத்தந்தது பெருமையாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அனுமதியை முதல்வா் பெற்றுத் தந்துள்ளாா்.
மேலும், ஏழை தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டம், தமிழக முதல்வருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி பாசன வசதிக்காக தாமிரவருணி - கருமேனி - நம்பியாறு திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வா் தனிக்கவனம் செலுத்தி வருவது தென்மாவட்ட மக்களிடையே அரசின் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி மக்களிடம் நல் வரவேற்பை பெற்றிருக்கிறது.
வசதியில்லா விளையாட்டு வீரா்களுக்கு வரப்பிரசாதமாக, ரூ.76 கோடியில் அம்மா இளைஞா் நலன் விளையாட்டு திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்துள்ளது, கிராமத்திலிருந்து புதிய விளையாட்டு வீரா்கள் உருவாவதற்கு ஏதுவாக அமையும்.
108 ஆம்புலன்ஸ் சேவையை போல் கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கென ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது கால்நடை வளா்ப்போரிடம் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
சேலம் வாழப்பாடியில் 16 ஏக்கா் பரப்பளவில் சா்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது, கிரிக்கெட் ரசிகா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.