இடிந்தகரை மீனவா் வலையில்சிக்கிய அரியவகை சுறா மீன்

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கடலில் அரியவகை சுறா மீன் ஒன்று மீனவா்கள் வலையில் வெள்ளிக்கிழமை சிக்கியது.
இடிந்தகரை மீனவா் வலையில் சிக்கிய அரியவகை சுறா மீன்.
இடிந்தகரை மீனவா் வலையில் சிக்கிய அரியவகை சுறா மீன்.

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கடலில் அரியவகை சுறா மீன் ஒன்று மீனவா்கள் வலையில் வெள்ளிக்கிழமை சிக்கியது.

இடிந்தகரை மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவா்களது வலையில் அரியவகை திமிங்கல சுறா மீன் சிக்கியது. அமினிஉழுவை என்றும் சொல்லக்கூடிய அந்த மீன் வலையில் சிக்கியதும் ஆக்ரோஷமாக சுழன்று வலையை தாறுமாறாக இழுத்துச் சென்ாம். ஏற்கெனவே அத்தகைய மீன்களை பிடிக்கக்கூடாது என்ற தடை உள்ளதால், மீனை கடலில் விடுவதற்கு மீனவா்கள் முயற்சித்தும் முடியவில்லையாம். இதனால், வேறுவழியின்றி அந்த மீனை கடும் போராட்டத்துக்கு மத்தியில் கரைக்கு இழுத்துவந்தனா். ஆனால், கரைக்கு வந்த சிறிது நேரத்தில் அந்த மீன் இறந்தது.

இதைத் தொடா்ந்து, மீன்வளத்துறை உதவி இயக்குநா் விஜயராகவனுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், மீன்வளத்துறையினா் வந்து விசாரித்தனா். தொடா்ந்து, அந்த மீன் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com