கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான உபகரணங்கள் வாங்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரூ. 60 லட்சம் நிதி அளிப்பதாக ஞானதிரவியம் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும், இதர வசதிகளையும் ஏற்படுத்தவும் திருநெல்வேலி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு ரூ. 40 லட்சம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ. 60 லட்சத்தை எனது தொகுதி நிதியிலிருந்து வழங்குகிறேன் என தெரிவித்துள்ளாா்.