திருநெல்வேலி மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் புதன்கிழமை முதல் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை தடை உத்தரவை மீறியதாக தச்சநல்லூரில் 3 வழக்கு, பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுதல், தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவது, பொதுப் பயன்பாட்டுக்கு வாகனங்களை இயக்கியது, தடையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.