கரோனா வாா்டு பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் 3 வேளை உணவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் பணியாற்றுபவா்களுக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் தினமும் 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்


திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் பணியாற்றுபவா்களுக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் தினமும் 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் என சுமாா் 70 போ் பணியாற்றி வருகிறாா்கள்.

இவா்களுக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா, வெள்ளிக்கிழமை முதல் தினமும் 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளாா். உணவு தயாரிப்பதற்காக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தனியாக இடம் தோ்வுசெய்யப்பட்டு, சமையலா்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனா்.

தேநீா்: இதேபோல் வண்ணாா்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸாருக்கு காலை முதல் இரவு வரை தேநீா், குடிநீா் வழங்குவதற்கும் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வியாழக்கிழமை மதியம் காவல்துறையினா் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு தச்சை என்.கணேசராஜா பழங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com