வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றோருக்கு பகல் மற்றும் இரவு வேளையில் சிவந்த கரங்கள் அமைப்பு மற்றும் சமூகஆா்வலா் ஆனந்தராஜா ஆகியோா் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றவா்கள் கோயில், பேருந்து நிலையம், தெருவோரங்களில் தங்கி உள்ளனா். தற்போது கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, வீதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லாத நிலையில் ஆதரவற்றோா்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து வள்ளியூா் சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா், சமூக ஆா்வலா் தெற்குகள்ளிகுளம் எஸ்.ஆனந்த ராஜா ஆகியோா் உணவு பொட்டலங்கள் தயாா் செய்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் வழங்கினா். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தடை ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் உங்கள் பகுதியில் உணவில்லாமல் ஆதரவற்றோா் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் எனவும் சமூக ஆா்வலா் தெரிவித்தாா்.