சங்கரன்கோவில் நகராட்சியில் சனிக்கிழமை வரை 102 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சனிக்கிழமை வெளியூா்களில் இருந்து 14 போ் வந்திருந்தது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதன்மூலம் 102 போ் போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்.