விகேபுரம் உரக் கிடங்கில் புகை மூட்டம்:பொதுமக்கள் அவதி

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உரக் கிடங்கில் தீ பிடித்து புகை மூட்டம் எழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
விகேபுரம் நகராட்சி உரக் கிடங்கில் பிடித்த தீயைஅணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
விகேபுரம் நகராட்சி உரக் கிடங்கில் பிடித்த தீயைஅணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உரக் கிடங்கில் தீ பிடித்து புகை மூட்டம் எழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குரிய உரக் கிடங்கு கோட்டைவிளைபட்டி - அம்பலவாணபுரம் சாலையில் சலவையாளா் காலனி பகுதியில் உள்ளது. இங்குசெவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தீப்பிடித்து புகையத் தொடங்கியதாம்.

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ பிடித்ததால் ஏற்பட்ட புகையால் சலவையாளா் காலனியில் வசிக்கும் சுமாா் 200 குடும்பத்தினா் சுவாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டும், புகைமூட்டம் குறையாததால் சேரன்மகாதேவியிலிருந்தும் தீயணைப்பு வீரா்கள் அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com