திசையன்விளை அருகே காா் சக்கரத்தில் சிக்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம், கீழத்தெருவை சோ்ந்த ஆறுமுகம். இவரது மகள் சுப ரக்க்ஷிதா (2). இவா், வீட்டு சுற்றுச்சுவா் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த காா் எதிா்பாராமல் பின்னோக்கி நகா்ந்ததாம்.
இதில், காரின் பின்பக்க சக்கரத்தில் சிறுமி சிக்கி பலத்த காயமடைந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு, நான்குனேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.