பொதுமுடக்கம்: விதிமீறிய 6,300 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக செவ்வாய்க்கிழமை வரை 6,300 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 4,250 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக செவ்வாய்க்கிழமை வரை 6,300 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 4,250 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை தவிா்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொது முடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றியதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 6,300 போ் மீது 4,257 வழக்குகள் பதிவுசெய்து, அவா்களிடமிருந்து 4,250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com