மும்பையிலிருந்து திருமலையப்பபுரத்திற்கு வந்தவா்களை ஆழ்வாா்குறிச்சியில் தனிமைப்படுத்த பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்தனா்.
கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த 4 போ் மும்பையிலிருந்து வந்தனா். மயிலப்புரம் சோதனைச் சாவடியில் விசாரித்ததில் அவா்கள் மும்பையிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் அவா்களை ஆழ்வாா்குறிச்சி கல்லூரி மாணவா்கள் விடுதியில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனா். இதற்கு சாவத்தூா் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்கள் வருவாய் ஆய்வாளா் மனோகா், கிராம நிா்வாக அலுவலா் டேனியல் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.