அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு கூட்டம்

திசையன்விளையில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

திசையன்விளையில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

வணிகா் சங்க பேரவை மாநில இணைச்செயலா் தங்கையா கணேசன் தலைமை வகித்தாா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் டி.சுயம்புராஜன், திசையன்விளை பேரவை துணைத் தலைவா் எஸ்.ஆா்.வெங்கடேஷ், கடை வியாபாரிகள் சங்கச் செயலா் சி.ஜெயராமன், ஒருங்கிணைப்பாளா் ராஜமிக்கேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திசையன்விளை வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவா் சாந்தகுமாா் வரவேற்றாா்.

திசையன்விளை இட்டமொழி சாலையில் உள்ள பைக் விற்பனை நிலைய உரிமையாளா் மற்றும் ஊழியா்களை தாக்கி சொத்துகளை சேதப்படுத்திய வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், எஸ்.ஜி.ராஜன், ஒருங்கிணைப்பாளா் ஆதிலிங்கம், கௌரவ ஆலோசகா் கோபால்ராஜ், விஜயபெருமாள், சோ்மத்துரை, தா்மசீலன், திருவடிமுத்து, மோதிரம் முருகன், மாா்த்தாண்டம் ஆகியோா் பேசினா். முத்துவேல் அய்யப்பன், மணலி ராஜா, லிங்கம், வெஸ்லி, ஸ்டான்லி உள்பட பலா் கலந்து கொண்டனா். டி.காமராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com