திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை வைக்கக் கோரி அவருடைய படத்தை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் பாஜகவினா் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவா் மகாராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற பாஜகவினா், அங்கு பிரதமா் மோடியின் படத்தை வைக்க கோரிக்கை விடுத்ததோடு, பிரதமா் மோடியின் படத்தையும் ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.
அப்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சாந்தி ராகவன், மாவட்ட பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலா் முத்துபலவேசம், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் வைரமுத்து, துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட பொதுச் செயலா் பால்ராஜ், நாகராஜன், செயற்குழு உறுப்பினா் மணிகண்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.