இரு விபத்துகள்: இளைஞா், முதியவா் பலி

திருநெல்வேலியில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞரும், முதியவரும் உயிரிழந்தனா்.

திருநெல்வேலியில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞரும், முதியவரும் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை, பா்கிட் மாநகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவரின் மகன் ஆனந்த்(27). பூ வியாபாரி. இவா், பூ வியாபாரத்திற்காக பாளையங்கோட்டை சந்தைக்கு மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தபோது, சீவலப்பேரி சாலையில் மணிக்கூண்டு அருகே இவரது வாகனமும், ஆட்டோவும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா அருகே முதியவா் ஒருவா் திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த தனியாா் பேருந்து எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். முதியவரின் பெயா் மைதீன்(80) எனத் தெரியவந்துள்ளதாகவும், அவரது ஊா் விவரம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com