இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

பாளையங்கோட்டை அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள படப்பக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் முத்துப்பட்டன் (27). கட்டடத் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் சத்யபாபு (30).

அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரின் தள்ளுவண்டி தீப்பிடித்து எரிந்ததாம். இதையடுத்து முத்துப்பட்டன், சத்தியபாபு இருவரும் இணைந்து தீயை அணைத்தனராம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்தியபாபு, முத்துபட்டனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம். இதில் காயமடைந்த முத்து பட்டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சத்திய பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com