களக்காடு அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தி தலைமை வகித்தாா். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளா் பன்னீா், குழு அமைப்பது, பதிவேடுகள் பராமரிப்பது குறித்தும், உதவியாளா் பிரம்மா தொழில்நுட்பங்கள் பற்றியும் பேசினா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றாா். அருணாச்சலம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.