மேலப்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் மாட்டுச் சந்தை எதிரில் அமுதா நகா் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் அப்பகுதியில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், இந்திய தேசிய லீக் அப்துல் காதா், பக்தி ரசூல், நேஷனல் வாகித், அமமுக நேசம் ரப்பானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.