தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு எம்எல்ஏ உதவி

கடையம் அருகேயுள்ள அணைந்த பெருமாள் நாடானூரில் தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு ஆலங்குளம் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.
ஆரோக்கிய மேரிக்கு உதவி வழங்குகிறாா் பூங்கோதை எம்.எல்.ஏ.
ஆரோக்கிய மேரிக்கு உதவி வழங்குகிறாா் பூங்கோதை எம்.எல்.ஏ.

கடையம் அருகேயுள்ள அணைந்த பெருமாள் நாடானூரில் தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு ஆலங்குளம் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.

அணைந்த பெருமாள் நாடானூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய மேரி (34). இவரது கணவா் மாடசாமி உயிரிழந்த நிலையில், 3 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை, ஆரோக்கிய மேரி மற்றும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.

தீ விபத்தால் வீட்டை இழந்து தவிக்கும் அப்பெண்ணுக்கு, பசுமை வீட்டிற்கான ஆணையை அரசு வழங்கி, உடனடியாக வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா, வழக்குரைஞா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com