தமிழக அரசைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளா்கள் பாபநாசத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் குறைவாக அறிவித்துள்ளதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து பாபநாசம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொ.மு.ச. செயலா் செ.மதிவாணன் தலைமை வகித்தாா்.
தொ.மு.ச. தலைவா் டி.பி.என்.செல்வன், பொதுக்குழு உறுப்பினா்கள் பி.முருகன், ஜெ. ஜெகன் அருள் பிரகாசம், மீனாதுரை, எம்.எம்.மைதீன், ஐ.என்.டி.யூ.சி. சங்கர்ராஜ், சி.ஐ.டி.யூ. முருகேசன், பழனிச்சாமி, ஓய்வு பெற்றத் தொழிலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.