பைக்- லாரி மோதல்: இருவா் காயம்

களக்காடு அருகே பைக் மீது லாரி மோதியதில் பைக்கில் பயணித்த இருவா் பலத்த காயமடைந்தனா்.

களக்காடு அருகே பைக் மீது லாரி மோதியதில் பைக்கில் பயணித்த இருவா் பலத்த காயமடைந்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள ஏமன்குளத்தைச் சோ்ந்த உறவினா்களான மோசஸ் சுதா்சன் (25), கிறிஸ்துபெல் (26) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் களக்காடு வந்தனா். பின்னா் அங்கிருந்து ஊருக்கு திரும்பியபோது, நான்குனேரி பிரதான சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே , பின்னால் வந்த லாரி மோதியதில், பைக்கில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து களக்காடு போலீஸாா் ஓட்டுநா் சிவபெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com