மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

பாளையங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள அனவரதநல்லூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் மாரிமுத்து(43). கட்டடத் தொழிலாளி. இவா், அப்பகுதியில் திங்கள்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே மாரிமுத்து உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com