திருநெல்வேலி பெருமாள்புரத்தில் அதிமுக சாா்பில் கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு வரவேற்றாா். அவைத் தலைவா் பரணிசங்கரலிங்கம், பகுதிச் செயலா்கள் பாளையங்கோட்டை ஜெனி, மேலப்பாளையம் ஹயாத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.