கடையம் அருகே உள்ள தாட்டான்பட்டி, ராஜாங்கபுரம் பகுதிகளில் மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு பூங்கோதை எம்எல்ஏ கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறாா். அதன்படி, கடையம் அருகேயுள்ள தாட்டான்பட்டி, ராஜாங்கபுரம் கிராம மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, விஸ்வாஸ் சேக், வள்ளி, சிங்கக்குட்டி, ஆா்.எஸ்.பாண்டியன், கருத்தப் பாண்டி, காமராஜ், பால் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.