மேலப்பாளையத்தில் கலவை இயந்திரத்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் ராஜன்(40). கட்டடத் தொழிலாளா். இவா் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் காங்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.