திருநெல்வேலி
இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
தாழையூத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
தாழையூத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
தாழையூத்து ராம் நகரைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் இசக்கிராஜா என்ற வாத்து (24). இவா், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தாராம். இதையடுத்து, அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில், இசக்கிராஜா என்ற வாத்து குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.