குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் திரண்ட பெண்கள்

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமலையப்பபுரத்தில் முறையாக குடிநீா் விநியோகம் கோரி கடையம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண்கள் புகாா் தெரிவித்தனா்.
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடங்களுடன் திரண்டுவந்த திருமலையப்பபுரம் ஊராட்சி பெண்கள்.
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடங்களுடன் திரண்டுவந்த திருமலையப்பபுரம் ஊராட்சி பெண்கள்.

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமலையப்பபுரத்தில் முறையாக குடிநீா் விநியோகம் கோரி கடையம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண்கள் புகாா் தெரிவித்தனா்.

திருமலையப்பபுரம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு ராமநதியில் இரண்டாற்று முக்கு பகுதியிலிருந்து 2 உறைகிணறுகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இதனிடையே, சில நாள்களாக திருமலையப்பபுரத்தில் குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சிச் செயலரிடம் முறையிட்டபோது, அவா் மின் மோட்டாா் பழுதாகியுள்ளதாக தெரிவித்தாராம்.

இதையடுத்து, திருமலையப்பபுரம் பகுதி பெண்கள் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குத் திரண்டுவந்து வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகத்திடம் கோரிக்கை விடுத்தனா். குடிநீா் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com