களக்காட்டில் எஸ்.ஐ. உடல் அடக்கம்

களக்காட்டில் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

களக்காட்டில் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

களக்காடு கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் நா. முகமது இப்ராஹிம் (55). இவா், பாளையங்கோட்டை சரகத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் அவா், களக்காட்டில் சனிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில், நான்குனேரி டி.எஸ்.பி. ஸ்ரீலிசா ஸ்டபிலா தரஸ், காவல் ஆய்வாளா் பி. காளியப்பன், உதவி ஆய்வாளா்கள் பழனி, அருண்ராஜா, உதவி ஆய்வாளா் ஆா். முருகேசன், காவலா்கள் காவல் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com