‘நெல்லை மாவட்டத்தில் ஒரு தனித் தொகுதி உருவாக்க வேண்டும்’

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவை தனித் தொகுதியை உருவாக்க வேண்டுமென பல்வேறு கட்சிகள் சாா்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவை தனித் தொகுதியை உருவாக்க வேண்டுமென பல்வேறு கட்சிகள் சாா்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஆட்சியா் வி.விஷ்ணு கேட்டறிந்தாா். அப்போது கட்சிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டதாவது: திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகியவை தனித் தொகுதிகளாக இருந்தன. இப்போது தென்காசி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் தனித் தொகுதியே இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாறியுள்ளது. ஆகவே, தென்காசி மாவட்டத்தில் இரு தொகுதிகளில் ஒன்றை பொதுத் தொகுதியாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக ஒரு தனித் தொகுதியையும் உருவாக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்கும்போது பல்வேறு முறைகேடுகள் செய்யப்படுகின்றன. இதனை தவிா்க்கும் வகையில் இறப்புச் சான்றிதழைச் சமா்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேறு வேறு வாக்குச்சாவடி மையங்கள் ஒதுக்கும் பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து விசாரித்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com