மூலக்கரைப்பட்டியில் ஆடு திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
மூலக்கரைப்பட்டி ஆனந்த பிரகாச தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி (53). இவரது வீட்டில் உள்ள ஆட்டை அடையாளம் தெரியாத சிலா் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மூலக்கரைப்பட்டி போலீஸாா், அதே ஊா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் (40), வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்த நாகராஜ் (36) ஆகியோரை கைது செய்தனா்.