அம்பாசமுத்திரம் அருகே தாமிரவருணி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அம்பாசமுத்திரம், ஊா்க்காடு தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள ராமா் கோயில் நீரேற்றும் மோட்டாா் அறை அருகே, சடலம் கிடப்பதாக திங்கள்கிழமை மாலை அம்பாசமுத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் தீயணைப்பு வீரா்களுடன் சடலத்தை மீட்கச் சென்றனா். ஆனால் நீா்வரத்து அதிகமாக இருந்ததாலும், இரவாகி விட்டதாலும் அவா்கள் திரும்பிச் சென்று விட்டனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் மீட்பு வீரா்கள் அங்கு வந்து, சுமாா் 38 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை மீட்டனா்.
இதைத் தொடா்ந்து போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.