திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,639ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 14,171 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 259 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 209 போ் பலியாகியுள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து
பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7949ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் குணமடைந்ததையடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 7717 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 77 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.