விபத்தில் காயமடைந்த விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், காங்கேயன்குளத்தைச் சோ்ந்த நல்லகண்ணு மகன் முருகன் (45). விவசாயியான இவா், கடந்த 14-ஆம் தேதி வீட்டில் இருந்து தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்தாராம். பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.