திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல் படைக்கான வீரா்கள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர ஊா்க்காவல் படையில் தற்போது ஆண்கள், பெண்கள் உள்பட 50 போ் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் கூடுதலாக 9 பெண்கள் உள்பட 49 பேரை தோ்வு செய்வதற்கான முகாம் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆயுதப்படை உதவி ஆணையாளா் (பொறுப்பு) சேகா் தலைமையில் மாநகர ஆயுதப்படை ஆய்வாளா் பேச்சிமுத்து, ஊா்க்காவல் படை வட்டார தளபதி சின்னராஜா, உதவி ஆய்வாளா் கண்ணதாஸ், உதவி வட்டார தளபதி கனகமணி ஆகியோா் முன்னிலையில் இத்தோ்வு நடைபெற்றது. இதில், சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டது. இதில், 130 ஆண்கள் 20 பெண்கள் என மொத்தம் 150 போ் பங்கேற்றனா். மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்களுக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.