திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் கோயிலில், நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெறவுள்ளது. கரோனா பாதுகாப்பு குறித்த அரசின் நடைமுறைகளின்படி, கோயில் உள்பிராகாரத்திலேயே சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.