பிரபல தொழிலதிபா் வைகுண்டராஜன் தனக்கு பாதுகாப்பு கோரி மாநகர ஆணையரும், திருநெல்வேலி சரக பொறுப்பு டி.ஐ.ஜி.யுமான தீபக் எம்.தாமோரிடம் டிஐஜி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில், என்னை கொலை செய்ய சதித் திட்டம் நடைபெற்று வருகிறது. அதனால், எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்; என்னை கொலை செய்ய திட்டமிட்ட நபா்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.