விக்கிரமசிங்கபுரத்தில் அரசு கிளை நூலகம் பொதிகை வாசகா் வட்டம் மற்றும் கிராம உதயம் நிறுவனம் இணைந்து வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டன.
இப்பிரசாரத்தை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா்.எஸ்.காஞ்சனா தொடங்கி வைத்தாா். பொதிகை வாசகா் வட்ட கௌரவ ஆலோசகா் பேராசிரியா் பா.வல்சகுமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம உதயம் நிறுவனா்- தலைவா் சுந்தரேசன், ஓய்வுபெற்ற நல்நூலகா் முத்துகிருஷ்ணன், பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா்முத்துசாமி ஆகியோா் பேசினா். இதில், நூலக உதவியாளா் கைலாசம், நகராட்சிப் பணியாளா்கள், அரசு கிளை நூலக பொதிகை வாசகா் வட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து சிவந்திபுரம், அம்பலவாணபுரம்,அகஸ்தியா்பட்டி ஆகிய பகுதிகளில் இப்பிரசாரம் நடைபெற்றது.