திருநெல்வேலி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவிகளுக்கான பரிசளிப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், இந்து சமய அறநிலையத் துறையின் திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் அ.தி. பரஞ்சோதி பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வரவேற்றாா். எழுத்தாளா் நாறும்பூநாதன் வாழ்த்திப் பேசினாா். இதில், மாணவா்-மாணவிகள், பெற்றோா் உள்பட பலா் பங்கேற்றனா்.