ராதாபுரம் வட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஆடு, மாடுகள்

ராதாபுரம் வட்டார வேளாண்மைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு ஆடு மற்றும் கறவை மாடு மானிய விலையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

வள்ளியூா்: ராதாபுரம் வட்டார வேளாண்மைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு ஆடு மற்றும் கறவை மாடு மானிய விலையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நீடித்த நிலையான மானாவாரி இயக்கம்-ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் ஆடுகள், கறவை மாடுகள் மானிய விலையில் வழங்கும் நிகழ்ச்சி ராதாபுரத்தில் நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன், திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் ராஜரத்தினம், உழவியல் துறை விஞ்ஞானி முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் முகம்மது காலித், சேரன்மகாதேவி உதவி இயக்குநா் ஆபிரகாம் ஜாப்ரி, ராதாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா பாய், நான்குனேரி வேளாண்மை உதவி இயக்குநா் ஜாஸ்மின் லதா, வேளாண்மை அலுவலா் மனோகரன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஆடு மற்றும் மாடுகளுக்கு கால்நடை உதவி மருத்துவா் சுரேஷ் காப்பீடு செய்தாா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் முத்துசாமி, லீனஸ், பவுல்துரை, சாந்தி, நவீனா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com