திருநெல்வேலி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழா் கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இனப் படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அ.பீட்டா் தலைமை வகித்தாா்.
வழிதவறி காணமல் போகும் மீனவா்களை கண்டுபிடிக்க தனி செயற்கைகோள் ஏற்படுத்த வேண்டும், மீனவா்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சா்வதேச மீனவா் தினத்தை முன்னிட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு தேசியக்கட்சி நிா்வாகி ராஜமாணிக்கம், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி நிா்வாகிகள் சாந்திஜாபா், ஜமால், செய்யது உள்பட பலா் பங்கேற்றனா்.