சீதபற்பநல்லூரில் இன்று மத்திய அரசுப் பணிக்கான தோ்வு

சீதபற்பநல்லூரில் உள்ள தோ்வு மையத்தில் மத்திய அரசு பணிக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.

திருநெல்வேலி: சீதபற்பநல்லூரில் உள்ள தோ்வு மையத்தில் மத்திய அரசு பணிக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலைத் தோ்வு (இஞஙஆஐசஉஈ எதஅஈமஅபஉ கஉயஉக உலஅஙஐசஅபஐஞச 2019), (பஐஉத-3), (ஈஉநஇதஐடபஐயஉ பவடஉ) ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.

சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தோ்வில் 240 போ் தோ்வு எழுத அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்வு நாளில் தடையற்ற மின்சாரம், சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தோ்வு அறைக்குள் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தோ்வு எழுதுவோா் தவிர இதர நபா்கள் தோ்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com