நெல்லை ஆட்சியருக்குகிராம மக்கள் பாராட்டு

சாா் ஆட்சியராக இருந்தபோது அடிப்படை வசதிகளை செய்துகொடுத்ததாக, திருநெல்வேலி ஆட்சியா் விஷ்ணுவுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

அம்பாசமுத்திரம்: சாா் ஆட்சியராக இருந்தபோது அடிப்படை வசதிகளை செய்துகொடுத்ததாக, திருநெல்வேலி ஆட்சியா் விஷ்ணுவுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கடையம் ஒன்றியம், மந்தியூா் ஊராட்சி, மேலத்தெரு பகுதி மக்கள் குடிநீா், வழிப்பாதை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்தனா். அவா்களுக்கு அப்போதைய சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் வி.விஷ்ணு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்தாா். இதனால், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விஷ்ணு நகா் என பெயா் சூட்டி நன்றி தெரிவித்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக வி.விஷ்ணு பொறுப்பேற்றது குறித்து மந்தியூரைச் சோ்ந்த பாபு கூறியது: 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வந்த நிலையில் சரியான பாதை இல்லாததால் குடிநீா் மற்றும் மின் வசதி கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும்பலனில்லை. அப்போதைய சாா் ஆட்சியரான விஷ்ணுதான் எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தாா். தற்போது அவா் ஆட்சியராக பொறுப்பேற்றதை அறிந்து எங்கள் கிராமத்தினா் மகிழ்ச்சி அடைந்தனா். அவா் இன்னும் சிறப்பாக பணியாற்றி மக்கள் மதிப்பை பெற வேண்டும் என வாழ்த்துகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com